இடுகைகள்

யுபிஎஸ்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

Padmasani Ammal - TNPSC

படம்
Padmasani Ammal   Born : Madurai, 1897 Padmasani Ammal was married at the age of 10 and was sent with her husband Srinivasa Varadan when she was 15. Her Husband was a Tamil pandit in manamadurai. He took part in the freedom movement and later left his job to become a reporter and manager of "Desabaktan" and "Navasakthi" magazines in Madurai. The couples jointly sang the songs of Subramaniya Bharathi to propagate the freedom movement. They actively participated in the Khadi movement and started producing spinning wheels at Madurai. They joined the Sri Bharatha Ashram founded by Subramaniyam Siva and even maintained it in the absence of Siva, whenever he was imprisoned. She headed the Neill Satyagraha in Madurai.

தமிழின் பிரதான பெண் எழுத்தாளர்கள்

படம்
அம்பை : அம்பை   அம்பை எனப்படும் சி.எஸ்.லக்சுமி   தமிழி ன் மிகமுக்கிய படைப்பாளிகளில் ஒருவர். பெண்ணிலை நோக்கினை வெளிப்படுத்தும்  வகைமையிலான தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடி. புனைவு எழுதுவது மட்டும் நில்லாது தி இந்து,  தி எக்னாமிக்ஸ் அண்ட் பொலிடிக்கல் வீக்லி போன்ற பல முன்னணி செய்தித்தாள்களில் கட்டுரைகளையும் எண்ணங்களையும் எழுதி வருகிறார்.   சாகித்ய அகாதெமி பரிசு பெற்ற நூல்கள் : சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சை பறவை (2021) மற்ற முக்கிய நூல்கள் : ஒரு கறுப்புச் சிலந்தியுடன் வற்றும் ஏரியின் மீன்கள் சொல்லாத கதைகள் காட்டில் ஒரு மான் வீட்டின் மூலையில் ஓர் சமையல் அறை அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு அந்தி மாலை  

பொருளாதார ஆய்வறிக்கை 2021-22-ன் முக்கிய அம்சங்கள்

படம்
   2021-22-ம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை பாராளுமன்றத்தில் குடியரசு தலைவரின் உரைக்குப்பின்னர் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்தார். இவ்வருட ஆய்வறிக்கையின் மைய கருப்பொருளாக "விரைவான அணுகுமுறை" (Agile Approach) எடுத்துக்கொள்ளப்பட்டது. பொருளாதார ஆய்வறிக்கை பொருளாதார ஆய்வறிக்கை என்றால் என்ன ? இந்திய பொருளாதார ஆய்வறிக்கை என்பது ஆண்டிற்கொருமுறை நிதி அமைச்சகம் வெளியிடும் கோப்பாகும். இக்கோப்பு இந்தியாவின் பொருளாதாரத்தை பற்றியும் வளர்ச்சியை பற்றிய அதிகாரபூர்வ எண்களை கொண்டது மட்டுமில்லாமல் இந்திய பொருளாதாரத்தின் மீதான மூல தரவாக (Source data) பார்க்கப்படுகிறது. இது பொருளாதார விவகாரங்கள் (Department of Economic affairs) துறையின் கீழ் செயல்படும் பொருளாதார பிரிவால் தலைமை பொருளாதார ஆலோசகரின் ஆலோசனையின் அடிப்படையில் தயாரிக்க படுகிறது. இந்தியாவின் முதல் பொருளாதார ஆய்வறிக்கை 1950-51-ம் ஆண்டில் பாராளுமன்றத்தின் முன் சமர்ப்பிக்கப்பட்டது. முக்கிய அம்சங்கள் :  வளர்ச்சி: 2021-22-ல் உறுதியான நிலையில் 9.2 சதவீத வளர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது (2020-21 ஆண்டு இதே கட்டத்தில் பொருளாத...

பிரதமரின் பால புரஸ்கர் விருதுகள் - 2022

படம்
  ஒவ்வொரு வருடமும் மாற்றத்தை ஏற்படுத்தும் சாதனைகளை புரிந்த குழந்தைகளுக்கு ஒன்றிய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் பிரதமரின் பால புரஸ்கர் ( PRADHAN MANTRI RASHTRIYA BAL PURASKAR)  விருதுகளை அறிவித்து வருகிறது. அவ்வகையில், இந்த வருடம் 29 குழந்தைகளுக்கு அவ்விருது கொடுக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டுள்ளது. விருதை பெரும் ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.1,00,000 பரிசாக பெறுவர். பிளாக் செயின் தொழில்நுட்பம் : இவ்வருடம் விருதுகள் மெய்நிகர் (Virtual) வழியில் வழங்கப்பட்டுள்ளது. ஐஐடி கான்பூர் பிளாக் செயின் தொழில்நுட்பத்தின் துணைக்கொண்டு இவ்விருதுகளை மெய்நிகர் வழியில் வழங்க வழிவகை செய்துள்ளது. இவ்விருதினை பெரும் ஒவ்வொருவரும் தமது கைபேசியில் செயலி ஒன்றை நிறுவதன் மூலம் தாங்கள் வென்ற சான்றிதழை மெய்நிகர் வழியில் பெற்றுக்கொள்ள முடியும். இந்த சான்றிதழ்கள் பிளாக் செயின் தொழில்நுட்பத்தில் சேமிக்கப்படுவதால், இவற்றை எவராலும் போலியாக உருவாக்கவோ, அழிக்கவோ முடியாது. மேலும் உலகின் எந்த மூலையிலும் இதன் நம்பகத்தன்மையை சரிபார்த்துக்கொள்ள முடியும்.   

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி | Asian Infrastructure development bank

படம்
  ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி என்பது ஆசியாவின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட ஒரு பன்முக வளர்ச்சி வங்கி ஆகும். இது சீனாவின் பெய்ஜிங்கில் சனவரி 2016 முதல் செயல்பட்டு வருகிறது. ஆசிய நாடுகளுக்கு இடையே உள்கட்டமைப்பை வளர்க்கும் பொருட்டு செயல்படும் இந்த பன்னாட்டு நிதி நிறுவனத்தில் சீனா, இந்தியா, இலங்கை என மொத்தம் 21 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி, பெய்ஜிங்   கொஞ்சம் வரலாறு          இரண்டாம் உலக போரின் பின்னர் உருவாக்கப்பட்ட உலக வங்கி (World Bank) , பன்னாட்டு நாணய நிதியம் (International Monetary Fund), ஆசிய வளர்ச்சி வங்கி (Asian Development Bank) போன்ற மிக சக்தி வாய்ந்த உலக நிறுவனங்களின் பின் அமெரிக்கா இருந்ததன் பொருட்டு, ஒரு மாற்று சக்தியை சீனா உருவாக்க முடிவு செய்தது. இதை செயலில் கொண்டு வரும் பொருட்டு 2014-ம் ஆண்டு இந்தோனேசியாவின் பாலியில் நடந்த ஆசிய பசிபிக் நாடுகளின் பொருளாதார சந்திப்பில் சீன அதிபர்  ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியைப் பற்றி அறிவித்தார். இந்த வங்...

யுபிஎஸ்சி தேர்வுகள் என்றால் என்ன ? அலசுவோம்

  யுபிஎஸ்சி  தேர்வுகள் என்பது  ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் (Union Public Service Commission) நடத்தும் இந்திய அளவிலான அரசுப்பணிகளுக்கான தேர்வாகும். ஒன்றிய அரசுப்பணியாளர் தேர்வாணையம் இந்திய அளவில் பல துறைகளிடம்  விண்ணப்பங்களை  பெற்று  எழுத்துத்  தேர்வு மற்றும் நேரிடை தேர்வின் மூலம் தகுதி வாய்ந்த பணியாளர்களைத் தேர்வு செய்கிறது. மேலும்,  இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி  , இந்திய வெளிநாட்டுப் பணி போன்ற பணிச்சேவைகளை ஒழுங்குபடுத்தி அப்பணியாளர்களின் பணிக்கால வாழ்வு, பயிற்சி மற்றும் சேவைவிதிகளை கட்டுப்படுத்தி வருகிறது .   யுபிஎஸ்சி  ஒவ்வொரு வருடமும்  இந்தியக்   குடிமைப்  பணி தேர்வுகளின் மூலம் இந்திய ஆட்சிப் பணி போன்ற மிக முக்கிய  அரசுப்   பணியாளர்களைத்  தேர்வு செய்கிறது. இந்த தேர்வு மூன்று  நிலைகளைக்  கொண்டது.     நிலை 1 : முதல்நிலை அல்லது தகுதி தேர்வுகள்     இந்த தகுதி தேர்வு இரண்டு தாள்களை கொண்டது. தாள் ஒன்றில் பொது அறிவு, அரசியல் அறிவியல், வரலாறு, புவியியல்...